எழுத்துக்கள் மனதை இளைப்பாற்றும் என்பார்கள். கதைகள்,கவிதைகள்,சிறுகதைகள்,நாவல்கள் என எல்லா நிலை எழுத்துக்களும் வாசகரின் மனதை கொள்ளை கொள்பவை. இதில் எனக்கு பிடித்த வகை என்றால் அது சிறுகதைகள் மற்றும் கவிதைகளே.
சிலர் கவிதை புத்தகங்கள் எழுதுவார்கள்,சிலர் கதை புத்தகங்கள் எழுதுவார்கள், அதிலே புது முயற்சியாக கதையும் கவிதையும் ஒரே புத்தகத்தில் இருக்க வேண்டும் என்பதன் வெளிப்பாடே
இந்த புத்தகம்.
கதைகள் எப்படி உருவாகும், அவரவர் வாழ்வில் நடப்பதை வைத்தே கச்சாப் பொருளாக இருக்கும்.
அப்படி என் வாழ்வில் நடந்த சில தவிர்க்க முடியாத வருத்தம்,காதல், கோபம் என சம்பவங்களை
ஓர் கதையாக தொகுத்துள்ளேன்.
கவிதகளை பொருத்தவரை இந்த புத்தகத்தை படிக்கும்போதே உணர்வீர்கள், நான் எப்படி கவிதை
எழுத ஆரம்பித்தேன் போன்ற கதைகள் இதிலே இடம் பெற்று இருக்கும்.
இது என்னுடைய முதல் புத்தகம் என்பதில்மகிழ்ச்சியே இனி மேலும் நிறைய புத்தகங்கள் வெளிவரும்.நன்றி !
Details
- Publication Date
- Sep 16, 2021
- Language
- Tamil
- Category
- Poetry
- Copyright
- All Rights Reserved - Standard Copyright License
- Contributors
- By (author): muthu murukuvel
Specifications
- Format
- EPUB